Posts

Showing posts from April, 2024

சாத்தனார் - ஐயனார் எனும் சாக்கிய பறையர்

. சாத்தன்', அல்லது 'சாத்தனார்' என்னும் பெயர் 'சேரநாட்டைஆண்ட ஆதன் சேந்தன் எனும் முற்கால சோர்களின்   திரிபு பெயர்களாகும் . 'சாத்தன்' என்பது புத்தருக்குரியபெயர்களுள் ஒன்று என்பது ' நிகண்டுகளால் அறியப்படுகிறது மேலும் சாத்தன் என்பதன் வேரு சொல்லே சாக்கியன். எனவே, 'மலைகளின் அரசனான சிவனே' முதல் சித்தனாகவும் புத்தனாகவும் அரியபடுகிறார் என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டுவந்தது. இந்தப் பெயரைப் புத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் 'சாத்தன்' என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது. பௌத்த நூலாகிய 'மணிமேகலை'யை இயற்றியவர் புத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் 'சாத்தனார்' என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. கோவலன் என்னும் 'சிலப்பதிகார'க் கதைத் தலைவனுடைய தந்தை 'மாசாத்துவன்' என்னும் புத்தன் என்பதும், கோவலன் கொலையுண்டபின், மாசாத்துவன் புத்த ப...

வெள்ளச்சியம்மா பற நாச்சியார்

Image
13 நூற்றாண்டில் கெட்டி முதலி என்ற சிற்றரசர் இருந்தார் இவர் ஆண்ட தாரமங்கலம் அருகே அமரகுந்தியில் கோட்டை இருக்கிறது. இவர் திருச்செங்கோட்டில் நிலத்தாம ரை எனப்படும் கைலாசநாதர் கோவிலை கட்டினார்.அக்கோவிலுக்கு முன் பெரிய கல்தூணை நிறுவ முயன்றார் ஆனால் யாராலும் தூக்கி நிறுத்த முடியவில்லை.அன்றிரவு கெட்டி முதலி சிற்றரசரின் கனவில் ஒரு பத்தினிப் பெண் தொட்டால் தான் கல்தூணை தூக்கி நிறுத்த முடியும் என கனவில் வந்தது.இதை கெட்டி முதலி நாடு முழுவதும் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.ஆனால் எந்த பெண்களும் வர தயங்கினர். அந்த சமயம் நம் பரையர் சமூகத்தை சேர்ந்த வெள்ளச்சி நான் தூக்குகிறேன் என முன்வந்தார் ஊரே பயந்து வியப்புடன் பார்த்தது வெள்ளச்சியம்மா அந்த கல்தூணை தொட்டு தூக்கி நிறுத்தினார்.உடனே கெட்டி முதலி வெள்ளச்சிம்மாவுக்கு நிலங்கள் காணிக்கையாக அளித்தார்.அந்த இடத்தில் ஒரு சிறு பகுதியில் வெள்ளச்சியம்மா பெயரில் மண்டபம் கட்டப்பட்டது.  புராணக் கதையில் வருகிற கற்புக்கரசி கண்ணகியை மதுரை மக்கள் வருடந்தோறும் வழிபடுகின்றனர். ஆனால், உண்மையாக நடந்துள்ள பத்தினி பெண்ணான நமது இனப் பெண் வெள்ளச்சியம்மாளின் வரலாறு நம்மில் எ...