Posts

Showing posts from October, 2024

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.

Image
 Today பழனி முருகனுக்கு எழுதப்பட்ட பறையர் சமூகச் செப்பேடு. ------------------------------- அமெரிக்காவில் கிடைத்தது. -------------------------------    பழனிமலை முருகனின் காலசந்திப்  பூசைக்காக பறையர் சமூகத்தால் எழுதப்பட்ட செப்பேடு ஒன்று அமெரிக்க அருங்காட்சியகத்தில் கிடைத்துள்ளது.இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:    பழங்காலத்தில் பழனிமலை முருகனுக்கு காலசந்திப் பூசை, திருமஞ்சனக் கட்டளைக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு எழுதப்பட்ட பல சமூகத்தினரின் செப்பேடுகள் நிறைய கிடைத்து வருகின்றன. அந்த வகையில் பறையர் சமூகத்தால் எழுதப்பட்ட செப்புப்பட்டயம் ஒன்று கிடைத்துள்ளது.இந்தப்பட்டயம் அமெரிக்க நாட்டின் மெட்ரோபாலிடன் அருங்காட்சியகம்- நியூயார்க்கில் ஆசியப் பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது .அதில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட இப்பட்டயத்தின் செய்தி, மேல்விபரம் தெரியவில்லை என்றும்  இப்பட்டயம் திருமதி W.J.கால்கன் (W.J COLHOUN) என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும் குறிப்பு உள்ளது.    இச்செப்பேட்டை ஆராய்ந்ததில்  24 கொங்குநாடுகளைச் சேர்ந்த ப...

சிவன் கோவிலுக்குஆளுடைய நாச்சி எனும் பறையர் குல பெண் பூசகர்

Image
 ஆண்டு1292- உடுமலைப்பேட்டை  சோழமாதேவி நல்லூர் சிவன் கோவிலுக்கு அந்த ஊரை சார்ந்த பறையன் ஆளுடைய நாச்சி எனும் #பெண்_பூசகரும் அவரது சிறிய தாயும் கதவு நிலைக்கால் இரண்டும் இரண்டு படிகட்டுகளும் கொடையளித்துள்ளனர். இதில் சிறப்பு  ஆளுடைய நாச்சி எனும் பறையர் குல பெண்  இந்த கோவிலின் பூசகர் என்பதாகும்  சில அறிவிலிகள் சொல்வது போல பறையர்களை கோவிலுக்குள்ள தமிழர் விடவில்லை என்பது பொய் எனவும் .. சில வர்ண பால் வேறுபாட்டு வெறிகொண்ட சைவசமய பைத்தியங்கள் உளறுவது போல  பெண்களுக்கு பூசை உரிமை இல்லை என்பதும் தவிடு பொடியாகிறது  சைவத்தில் சாதியில்லை !!. சைவத்தில் பாலியல் வேறுபாடு இல்லை !! உண்டு என சொல்பவர்  வடமொழி வேத ஸ்மார்த்த வித்து வழியாக வந்தவராக மட்டுமே இருக்கமுடியும்  !!. தமிழராகவோ சைவராகவோ இருக்க வாய்ப்பில்லை !! #சிவோகம்

நந்தனும் - சிதம்பர இரகசியமும்

Image
 வேதாந்த சனாதன மதம் கூறும் நந்தன் கதை கட்டுக்கதை என்பதை நிறுவும் சான்றுகள். தமிழ் பக்தி இலக்கியங்களில் நந்தன் பற்றிய குறிப்பும் கல்வெட்டாதாரங்களும்.  கல்வெட்டு காலம் - 8ம் நூற்றாண்டு (படம் -1)  செய்தி: கி. பி 8ம் நூற்றாண்டு புறமலைநாட்டை ஆண்ட அரசன் ஒரு புலையன்.  சுந்தரர் காலம் - 8ம் நூற்றாண்டு நூல் - திருத்தொண்டர் புராணம். நந்தனார் பற்றிய குறிப்பு - சிவன், திருமால், முருகன் என மூவரை குறிப்பதோடு நான்காவதாக "செம்மைத் திருநாளைப்போவார்" என புலையனான நந்தனை குறிப்பிடுகிறார்.  நம்பியாண்டார் நம்பி - காலம் 10ம் நூற்றாண்டு.  நூல்: திருத்தொண்டர் திருவந்தாதி நந்தனார் பற்றிய குறிப்பு : நந்தன் என்பவர் புலையன் அவரது ஊர் ஆதனூர்.  நந்தனை பற்றிய ஆரிய கட்டுக்கதை இடம் பெற்ற நூல் - பெரியபுராணம்.  ஆசிரியர் - சேக்கிழார்.  காலம் - 12ம் நூற்றாண்டு.  தெளிவு - புலையன் அரசனாக இருந்த கல்வெட்டு சான்று. மற்றும் சுந்தரரின் கூற்றுக்கு 400 ஆண்டுகள் பிந்தைய பெரிய புராணம் கூறுவதை பிடித்து தொங்குவது அறிவிலித்தனம்.  தில்லை கோவிலுக்கு 1000 ஆண்டுகள் பழமையான திருவாரூர் தியா...

Battle of Black Town

Image
அக்டோபர் 15 பறையர் பேரினத்தின் மாவீரன் #மருதநாயகம்_சாம்பவர் (எ) முகமது யூசுப் கான் (Muhammad Yusuf Khan) அவர்களின் 260 ஆண்டு நினைவு நாள்... பிரஞ்சு படைகள் மெட்ராசை கைப்பற்ற நடத்திய தாக்குதலில் பரையர் போர் படையினரின் தாக்குதலால் பிரெஞ்சுப் படைகள் தோற்றுப் போயின. பூர்வீக மண்ணை காக்க பரையர் படையின் இந்த கடும் போரை ஆங்கிலேய ஆவணங்கள் Battle of Black Town என்று பதிவு செய்துள்ளது. 2000 வீரர்களை கொண்ட பரையர் படையை Black Army என்று ஆங்கிலேயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1500 பரையர்களையும் குதிரை படையையும் பறையர் பேரினத்தின் மாவீரன் #மருதநாயகம்_சாம்பவர் (எ) முகமது யூசுப் கான் (Muhammad Yusuf Khan) போர்ப்படை தளபதியாக நின்று வழிநடத்தி உள்ளார். ஆங்கிலேயர்கள் #மருதநாயகம்_சாம்பவரை பற்றி தம் ஆவணங்களில் குறிப்பிடுகையில் #வீரர்களின் #அரசன்’ (King Of Sepoy) என்று பதிவு செய்துள்ளனர். 67 நாட்கள் தொடர்ந்த இந்த கடும் போரில் பரையர் படையின் தாக்குதலால் 8000 பேர் கொண்ட பிரஞ்சு படை முற்றிலும் வீழ்த்தப்பட்டது. மாவீரன் அலெக்சாண்டரை விட இந்த உலகத்தில் பெரும் வீரன் மாவீரன் #மருதநாயகம்_சாம்பவர் ஆவார்,  பறையர் ப...