இந்தி எதிர்ப்பு முதல் களபலியாளரும், இதன் வரலாற்றை திரித்த திமுக கருணாநிதியும்,ஸ்டாலினும்.. சென்னை ஜார்ஜ் டவுன்,போர்த்துகீசு தெருவைச் சேர்ந்த இலட்சுமணன், குப்பம்மாள் என்கிற பறையர் இன பெற்றோருக்குப் பிறந்தவர் நடராசன். அன்றைய சென்னை மாகாணத்தில், இராஜாஜி பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக ஆக்கியதை எதிர்த்து,1937இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தமிழகத்தில் கொதித்தெழுந்த தமிழ் பற்றாளர்கள் வரிசையில் பறையர் சமுகத்தை சேர்ந்த நடராசனும் ஒருவர்.திசம்பர் 5,1938 அன்று, சென்னை சௌகார்பேட்டையில் இருந்த இந்து தியாலஜிகல் உயர்நிலைப்பள்ளி முன்பு இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மறியலில் கலந்துகொண்டு பலரில் ஒருவராக கைது செய்யபட்டார். நடராசன் உள்ளிட்டோருக்கு ஏழரை மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்தபோது ஏற்பட்ட வயிற்றுவலிகாரணமாக திசம்பர் 30 அன்று சென்னை அரசு மருத்துவமனையில் நடராசன் சேர்க்கப்பட...
Today பழனி முருகனுக்கு எழுதப்பட்ட பறையர் சமூகச் செப்பேடு. ------------------------------- அமெரிக்காவில் கிடைத்தது. ------------------------------- பழனிமலை முருகனின் காலசந்திப் பூசைக்காக பறையர் சமூகத்தால் எழுதப்பட்ட செப்பேடு ஒன்று அமெரிக்க அருங்காட்சியகத்தில் கிடைத்துள்ளது.இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: பழங்காலத்தில் பழனிமலை முருகனுக்கு காலசந்திப் பூசை, திருமஞ்சனக் கட்டளைக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு எழுதப்பட்ட பல சமூகத்தினரின் செப்பேடுகள் நிறைய கிடைத்து வருகின்றன. அந்த வகையில் பறையர் சமூகத்தால் எழுதப்பட்ட செப்புப்பட்டயம் ஒன்று கிடைத்துள்ளது.இந்தப்பட்டயம் அமெரிக்க நாட்டின் மெட்ரோபாலிடன் அருங்காட்சியகம்- நியூயார்க்கில் ஆசியப் பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது .அதில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட இப்பட்டயத்தின் செய்தி, மேல்விபரம் தெரியவில்லை என்றும் இப்பட்டயம் திருமதி W.J.கால்கன் (W.J COLHOUN) என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும் குறிப்பு உள்ளது. இச்செப்பேட்டை ஆராய்ந்ததில் 24 கொங்குநாடுகளைச் சேர்ந்த ப...
Comments