பரையர் குல சோழ மன்னரான "பிறவிடை சாம்பான்" என்பாரது சமாதியே தஞ்சை பெருவுடையார் கோவில்
தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட " *இடங்கையர் வலங்கையர் சரித்திரம்* " என்னும் நூலில் இது ஆதாரபூர்வமாக உள்ளது வலங்கையர் வரலாறு ( டி 462 ) என்னும் சுவடியில் " *பிறவிடை சாம்பான்* " மன்னரது வரலாறு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்த சுவடிகள் இன்றும் தமிழ்நாடு கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது சுவடி கூறும் வரலாறு *ராவணன் என்னும் மல்லியை பெருமானுக்கு மூன்று மகன்கள் இருந்தனர்* .
1)சாம்புகன்
2)பிறவிடைசாம்பான்
3)தியாகன் என்னும் தியாகச் சாம்பான்
இவர்கள் அக்கால சோழ மண்டலத்தில் சிறிய கோட்டை கட்டி பழங்குடி மன்னர்களாக* வாழ்ந்துள்ளனர் பிறவிடை சாம்பானது கோட்டை " *விளாறுகோட்டை* " அதுவே பின்னாளில் 'விளாரிகோட்டை' என்று திரிந்தது என்கின்றனர். இந்த கோட்டை *வெண்கலத்தாலும் இரும்பு தூண்களாலும் மண்ணாலும் கட்டப்பட்டது* என்றும் அதனால் இக்கோட்டையானது என்றும் 'மலாரிகோட்டை" என்றும் வழங்கப்பட்டது சோழ மன்னன் "பிறவிடை சாம்பான்" மரித்த பின் இந்த கோட்டையில் தகனம் செய்யப்பட்டான் .
*கணவன் மரித்த துயரத்தில் அவனது மனைவி பெரிய நாயகியும்* அவ்விடத்திலே தீ குளித்து இறந்தால் "பிறவிடை சாம்பான்" மரணித்த அந்த இடத்திலே ஒரு *வேப்ப மரமும் ஒரு அரசமரமும் வைத்து திண்ணை அமைத்து இரண்டு செங்கல் வைத்து* அவர்களை "தெய்வமாக" அந்த ஊர் மக்கள் வணக்க துவங்கினர்.
*அந்த இடத்திலே நந்தவனமும் கிணற்று தண்ணீர் பந்தலும் பிற்காலத்தில் அமைக்கபட்டது* பிற்காலத்தில் "பரகேசரி சோழ மாமன்னர்" இவ்விடத்திற்கு வந்த பொழுது "பிறவிடை சாம்பான்" தகனம் செய்யப்பட்ட *அவ்விடத்தின் சிறப்பை கேட்டு இரண்டு நாள் அங்கு தங்கினார்* அவ்வாறு "பரகேசரி மாமன்னர்" *அங்கு தங்கும் பொழுது "பிறவிடை சாம்பனும்" அவரது மனைவி "பெரிய நாயகியும்" பரகேசரி மாமன்னர் கனவில் தோன்றி அவ்விடத்தில் அவர்களுக்கு திருப்பணி செய்யுமாறு கூறினார்* என்றும் பரகேசரி மன்னர் அவ்விடத்தில் வேண்டிய காரியம் கைகூடியதால்
அதன் பேரில் அவ்விடத்திலேயே "பிறவிடை சாம்பானுக்கு கோவில்" *கோவில் எழுப்புவதாக பிரதிக்கினை செய்ததை இச்சுவடி குறிப்பிடுகிறது* .
பின்னாளில் தான் எடுத்த பிரதிக்கினை நிரைவேற்றும் விதமாக
விவசாய பூமியாய் இருந்த பகுதியில் சுற்றிலும் மதில் எழுப்பி கோபுரம் வைத்து "பிறவிடைசாம்பானுக்கு" உலகம் வியக்கும் வகையில் பெரிய கோவிலை காட்டினார் அக்காலத்தில் " *பிறவிடை சாம்பான் கோவில்* " என்று அழைக்கபட்ட இக்கோவிலானது பின்னாளில் " *பெருவிடை நயினார் கோவில்* " என்று பெயர் மாற்றி பூசிக்கப்பட்டது என்றும் அதுவே பிற்காலத்தில் "வடுக தெலுங்கு மன்னர்கள்" கட்டுப்பாட்டில் " *பெருவிடை ஈசுவரன் கோவில்* " என்று அழைக்கப்பட்டதாகவும் மராட்டிய மன்னர்கள் கட்டுப்பாட்டில் வந்தபொழுது
முழுக்க வடமொழியில் திரிந்து " *பிரகதீஸ்வரர் கோவில்* " என்று வழங்கப்படுகிறது என்று அறிய முடிகிறது படையெடுப்புகள் பல நிகழ்ந்தாலும் பெயர்கள் வடமொழியில் திரிந்தாலும் *பரையர் குல மன்னர் "பிறவிடை சாம்பான்" அவர்களது புகழ் கதிரவன் போல் இன்றும் என்றும் மறைக்க முடியாமல் நிலைத்திருக்கிறது* ....!!!
நூல்: தமிழ்நாடு கீழ்த்திசை சுவடிகள் பதிப்பகம் வெளியிட்ட
"இடங்கையர் வலங்கையர் வரலாறு"
*வாழ்க பறையர் பேரினம்,
வளர்க சாம்பவர் குல ஒற்றுமை*
Comments